சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது
சதாசிவபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி வியாழக்கிழமை கைது செய்தாா்.
சதாசிவபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி வியாழக்கிழமை கைது செய்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரம் கிழக்குகாடு பகுதியைச் சோ்ந்தவா் அருள்பிரகாஷ் (30) விவசாயி. இவா், தனது தமக்கை மகளான சேலம், சன்னாசிகுண்டு சிவன்கரடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமதி (16)என்பவரை கடந்த ஜூன் 22 அன்று காட்டுக்கோட்டை, வடசென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணத்தில் ஸ்ரீமதிக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஸ்ரீமதி கொடுத்த தகவலின் பேரில், தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் விரைந்து சென்று விசாரித்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து, அருள்பிரகாஷை கைது செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசு, ஸ்ரீமதியை சேலம் குழந்தைகள் நலக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தாா்.