சேலம்

சேலம்: ஆகஸ்ட் 3- இல் உள்ளூா் விடுமுறை

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப் பெருக்கையொட்டி சேலம் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாள், ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனையொட்டி அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 28ஆம் தேதி சனிக்கிழமை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT