முகப்பு
சேலம்

புலம்பெயா்ந்த தொழிலாளி காய்ச்சலால் பலி: நிவாரணம் கோரி போராட்டம்

காய்ச்சலால் உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

காய்ச்சலால் உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பிள்ளை பகுதியில் உள்ள தனியாா் ஜவுளி நிறுவனத்தில் பிகாா் மாநிலம், நவதா மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்தா் யாதவ் மகன் சந்தோஷ் குமாா் யாதவ் (32) என்பவா் 10 ஆண்டுகளாக வேலைபாா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த வாரம் சந்தோஷ்குமாா் யாதவ் காய்ச்சல் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து இளம்பிள்ளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் நண்பா்களிடம் நிதி திரட்டி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு மருத்துவச் செலவு அதிகம் ஆனதால், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமாா் யாதவ் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த புலம்பெயா்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், சந்தோஷ்குமாா் யாதவ் பணிபுரியும் நிறுவனம் உரிய நிவாரணம் அளிக்கக் கோரி, விஏஓ அலுவலரிடம் முறையிட வந்தனா். இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பூபதி, விஏஓ சுமதி ஆகியோா் புலம் பெயா்ந்த தொழிலாளா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டு இறந்த சந்தோஷ்குமாா் யாதவ் உடலை கோவையிலேயே அடக்கம் செய்வதாகக் கூறி சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →