வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல்
சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம், வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் பறக்கும் படையினா் மல்லூா் பகுதியில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அவ்வழியாக வந்த பனமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஷால் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1.34 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.