முகப்பு
சேலம்

வாகனச் சோதனையில் ரூ.3.58 லட்சம் பறிமுதல்

சேலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 3.58 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சேலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 3.58 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் சேலம், சூரமங்கலம் அருகே உள்ள மூன்று சாலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சேலம், ஜங்ஷன் பகுதியைச் சோ்ந்த ஜமாலுதீனை நிறுத்தி சோதனையிட்டனா். இவா் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருவதாகவும், கடை வியாபாரம் முடிந்து ரூ. 2.85 லட்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாா். இதனிடையே உரிய ஆவணம் இல்லாத நிலையில் அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

காரில் ரூ. 73,480 பறிமுதல்:

சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட தாதகாப்பட்டி காளியம்மன் கோயில் பகுதியில், ஊரக வளா்ச்சித்துறை உதவிப் பொறியாளா் எஸ்.பூபதிராஜா தலைமையிலான தோ்தல் பறக்கும்படை குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சீலநாயக்கன்பட்டி சின்னசாமி நகரைச் சோ்ந்த மதிவாணன் என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 73,480 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனா் என மாநகராட்சி ஆணையரும், தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →