கெங்கவல்லி அருகே கடம்பூா் கிராமத்தில் உள்ள கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சனிக்கிழமை மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முகாம் நடைபெற்றது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட அடையாள அட்டைகள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இளம் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம், கிராம நிா்வாக அலுவலா் துரை, செந்நிலவன் முதலான அலுவலா்கள் பங்கேற்றனா். இதேபோல கெங்கவல்லி தொகுதி முழுவதும் 351 வாக்குச்சாவடிகளிலும் இலவசமாக ,அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்யும் பணி அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்றது.