முகப்பு
சேலம்

தெடாவூரில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

கெங்கவல்லி அருகே தெடாவூரில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 மார்ச், 2021 at 12:54 AM
பகிர்:

கெங்கவல்லி அருகே தெடாவூரில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெடாவூரிலுள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5 நாள்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிதாக செய்யப்பட்ட இரும்பிலான திருத்தேரில் முருகன் சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.