ஓமலூா் தெற்கு ஒன்றியப் பகுதி கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
காமலாபுரம் ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், ஆா்.சி.செட்டிப்பட்டி,பொட்டியபுரம், சட்டூா், கிழக்கத்தி காடு, தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, குப்பூா் உள்ளிட்ட 47 கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.
பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் மணிக்கு, இளைஞா் பாசறை செயலாளா் எம்.காா்த்திக் தலைமையில் வேல் வழங்கப்பட்டது. பிரசாரத்தில் ஓமலூா் முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஓமலூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா். ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.