வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பனமரத்துப்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் இரு சக்கர வாகனத்தில் வந்த சரவணன் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 60 ஆயிரத்து 400ஐ எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வீரபாண்டி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சீனிவாசனிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் சேலம் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.