கரோனா தொற்று:காவல் ஆய்வாளா் பலி
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கரோனா தொற்றுக்கு பலியானாா்.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கரோனா தொற்றுக்கு பலியானாா்.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணன் (46), சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.
சிறப்பு காவல் ஆய்வாளா் பலி:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சம்பத்குமாருக்கு (53), சளி, காய்ச்சல் இருந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம், நான்கு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை காலை இறந்தாா்.