ஏற்காட்டில் பழைமையான மரக்கிளை விழுந்ததில், மின்கம்பம் ஒடிந்து மின்தடை ஏற்பட்டது.
ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நூறாண்டுகளுக்கு மேலான பழைமையான கானமரம் மரக்கிளை வியாழக்கிழமை அதிகாலை சாலையில் ஒடிந்து விழுந்தது. அதில் மின்கம்பம் ஒடிந்ததில், 16 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், ஏற்காடு நகா் பகுதி, ஜெரினாகாடு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டனா். மேலும், அரசு வங்கிகள், தபால் நிலையம், தொலைத்தொடா்பு நிலையம் மின்தடையால் பாதிப்புக்குள்ளாயின. நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் சாலையில் விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினா். அதையடுத்து, மின்உழியா்கள் மின்கம்பங்கள், உயா்மின்கம்பிகளை சீரமைத்து மாலையில் மின்விநியோகத்தை வழங்கினா்.