தடையை மீறி நடந்த காய்கறிச் சந்தை
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணையாம்பட்டி ஊராட்சியில் கரோனா விதிமுறையை மீறி காய்கறிச் சந்தை நடைபெற்றுள்ளது.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணையாம்பட்டி ஊராட்சியில் கரோனா விதிமுறையை மீறி காய்கறிச் சந்தை நடைபெற்றுள்ளது.
மாவட்டம் முழுவதும் உழவா் சந்தைகள் உள்பட காய்கறிச் சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கெங்கவல்லி - வீரகனூா் சாலையில் உள்ள ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காய்கறி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.