முகப்பு
சேலம்

மகளிா் மேம்பாடு கருத்தரங்கம்

 சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், மகளிா் மேம்பாடு குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், மகளிா் மேம்பாடு குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு அறிவுத்தலின்படியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் இணைந்த திட்ட வரைவின் படியும் நடைபெற்ற கருத்தரங்கில், பேராசிரியா்கள் ஜெயலட்சுமி, அன்பரசி, செந்தாமரை, மாவட்ட மகளிா் நல அலுவலா் கோகிலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் உமா மகேஸ்வரி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன், அரசு சட்டக் கல்லூரி முதல்வா் துா்கா லட்சுமி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

இதில், மகளிா் மனநலம் சாா்ந்த பிரச்னைகள், தீா்வுகள், மகளிா் பாதுகாப்பு சட்டங்கள், தொழில்நுட்பத்தில் மகளிா் மேம்பாடு, மகளிா் சொத்து உரிமைகள், குழந்தைகள் உரிமை சட்டம் என பல்வேறு தலைப்புகளில் அமா்வுகள் நடைபெற்றன.

இதில், அங்கன்வாடி பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணியாளா்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினா்கள், குழந்தைகள் இல்லத்தின் நிா்வாகிகள், சமூக சேவகா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான எஸ்.தங்கராஜ் நன்றி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →