முகப்பு
சேலம்

கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

 சேலத்தில் உள்ள கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 சேலத்தில் உள்ள கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம், சுகவனேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு கோயில் உள் புறத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தா்கள் காா்த்திகை தீபத்தை வணங்க அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் வரிசையாகக் கோயிலுக்குச் சென்று காா்த்திகை தீபத்தையும், சுவாமியையும் வணங்கிச் சென்றனா்.

சேலத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில், கந்தாஸ்ரமம், லட்சுமி நரசிம்ம சுவாமி, அழகிரிநாதா், கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தா்கள் வந்து காா்த்திகை தீபத்தை வணங்கிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →