ஏரிநீரில் மூழ்கி மாணவா் பலி
எடப்பாடி அருகே ஏரியல் மூழிக் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே ஏரியல் மூழிக் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே உள்ள ஊஞ்சாகாடுப் பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி. இவரது மகன்
தரணிநாதன் (9) அங்குள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப் பகுதியில் உள்ள ஏரியில் தந்தையுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி தரணிநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து எடப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.