மேட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கரோனாவுக்கு பலி
சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் இரு நாள்களுக்கு முன்பு கரோனா பாதித்து சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி
சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் இரு நாள்களுக்கு முன்பு கரோனா பாதித்து சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேட்டூர் காவல் நிலையத்தில் மேலும் இரண்டு காவலர்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேட்டூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பணியிலிருந்த காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.