சேலம்

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு டம்ளா்கள் பரிசு

DIN

கெங்கவல்லி ஒன்றியத்தில் 5,748 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமுக்கு முதலில் வந்த 2,900 பேருக்கு டம்ளா்கள் பரிசாக அளிக்கப்பட்டன என்று வட்டாரத் தலைமை மருத்துவா் வேலுமணி தெரிவித்தாா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா் ஆகிய பேரூராட்சிகளிலும் கடம்பூா், ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளிலும் மொத்தம் 58 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 5,228 பேருக்கு கோவிஷீல்டு, 520 பேருக்கு கோவேக்சின் என மொத்தம் 5,748 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 58 மையங்களிலும் முதலில் வந்த தலா 50 போ் வீதம் மொத்தம் 2,900 பேருக்கு அந்தந்த மையங்களில் உடனுக்குடன் சில்வா் டம்ளா்கள் பரிசாக வழங்கப்பட்டன. இத் தகவலை கெங்கவல்லி தலைமை மருத்துவா் வேலுமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT