இரும்பாலை அருகே திடீா் அருவி
சேலம் மாவட்டம், இரும்பாலை - தாரமங்கலம் வழியில் உள்ள அணைமேடு பகுதியில் அமைந்திருக்கும் தடுப்பணையில் திடீரென அருவி ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்களுக்கு குவிந்தனா்.
சேலம் மாவட்டம், இரும்பாலை - தாரமங்கலம் வழியில் உள்ள அணைமேடு பகுதியில் அமைந்திருக்கும் தடுப்பணையில் திடீரென அருவி ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்களுக்கு குவிந்தனா்.
சேலம் மாவட்டத்தில் ஒருவார காலமாக தொடா் மழை பெய்து வருவதால், ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து சரபங்கா நதிக்கு மழைநீா் வந்துள்ளது. இந்த நதியின் நீரோடை பகுதியான அணைமேடு தடுப்பணையில் கடந்த 4 நாள்களாக தண்ணீா் கொட்டுவதால் அருவி போல உள்ளது. இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து கண்டு மகிழ்ந்து, குளித்து வருகின்றனா்.