தலைமையாசிரியா்களுடன்,முதன்மைக் கல்வி அலுவலா் இணையவழிக் கூட்டம்
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முருகன் வெள்ளிக்கிழமை, இணையம் மூலம் கூட்டத்தை நடத்தினாா்.
பள்ளிகளில் நவம்பா் 1-ஆம் தேதி ஒன்று முதல் முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட இருப்பதால், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முருகன் வெள்ளிக்கிழமை, இணையம் மூலம் கூட்டத்தை நடத்தினாா்.
இதில் அவா் பேசும்போது, அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளுடன், அறைகளை சுத்தமாகவும், மின்சாதனங்களை பழுது நீக்கியும் வைத்திருக்க வேண்டும். கரோனா வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தினாா். இந்த இணையவழிக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களும் பங்கேற்றனா்.