ஆத்தூர்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்புவிழா மாவட்ட தலைவர் ரா.கண்ணன் நாயுடு தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பாமக மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வன்னயர் சங்க நிர்வாகி பச்சமுத்து வ.மயில்சாமி, தலைவாசல் ஒன்றிக்குழுத் துணைத்தலைவர் அஞ்சலை, குழந்தைவேல் ராமச்சந்திரன், சங்கர் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.