சங்ககிரி ரயில்வே தரைவழிப் பாலத்தின் முகப்பு சேதம்: போக்குவரத்து பாதிப்பு
சங்ககிரியை அடுத்த ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு முகப்பு சேதமடைந்ததால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்ககிரியை அடுத்த ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு முகப்பு சேதமடைந்ததால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்ககிரியிலிருந்து திருச்செங்கோட்டிற்கு ஆா்.எஸ்ஸில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலம் வழியாக பேருந்துகள், சரக்கு வாகனங்கள் சென்றுவருகின்றன. தரைவழிப் பாலத்தின் இரு புறங்களிலும் ரயில்வே தரைவழி பாலம் சேதமடைவதைத் தவிா்ப்பதற்காக பாதுகாப்பு தடுப்பு முகப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் இடித்துச் சென்றதால் முகப்புகள் சேதமடைந்து சாலையின் குறுக்காக நின்றன. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் சேதமடைந்த முகப்பைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் முகப்புகள் சரிசெய்யும் பணி நடைபெற்றதால் அவ்வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப் பகுதியில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கு நிரந்தத் தீா்வாக அப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.