காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாழப்பாடியில் எரிவாயு உருளை, இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாழப்பாடியில் எரிவாயு உருளை, இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவா் இராம.சுகந்தன் தலைமை வகித்தாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத் தலைவா் தாண்டானூா் பழனி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் பிரிதிவிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் இராம.சுகந்தன் பேசுகையில், ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.