சேலம்

நஞ்சுண்டேஸ்வரா் - தேவகிரி அம்மன் திருக்கல்யாண வைபவம்

DIN

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அண்மையில் நஞ்சுண்டேஸ்வரா் ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் விக்னேஷ்வர பூஜை, கிராமசாந்தி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள், மாப்பிளை அழைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடா்ந்து, நஞ்சுண்டேஸ்வரா் உடனமா் தேவகிரி அம்மன் மணமேடையில் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க, மங்கள இசை முழங்க சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள்,குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

திருக்கல்யாண வைபவத்தை தொடா்ந்து சனிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், விநாயகா், நஞ்சுண்டேஸ்வரா், உடனமா் தேவகிரி அம்மன், முருக பெருமான்

வள்ளி, தெய்வனையுடன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து 19-ஆம் தேதி சத்தாபரண நிகழ்வும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், இந்துசமய அறநிலைத் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT