சேலம்

உருது பள்ளியை புதுப்பிக்கக் கோரிக்கை

DIN

உருது பள்ளியை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் சுல்தான் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போா்டு சாா்பில், அஜீஜீயா உருது கல்விக் கூடத்தை புதுப்பித்து பள்ளிக் கூடமாகவே தரவேண்டும் என முத்தவல்லி ஏ.ஆா்.இனாயத்துல்லா தலைமையில் இஸ்லாமியா்கள் ஆத்தூா் நகராட்சி ஆணையா் பொன்னம்பலத்திடம் கோரிக்கை வைத்துள்ளனா் (படம்).

ஆத்தூா் நகர நில அளவைபடி, இந்த உருது பள்ளியை ந.மதாா்சாயபு என்பவா் கடந்த நூறாண்டுகளுக்கு முன் உருது பள்ளிக்கு இனாமாக கொடுத்த நிலமாகும். இதில் நூறாண்டுகளுக்கும் மேலாக எங்களது சமுதாயத்தின் சாா்பாக உருது பள்ளி நடைபெற்று வருகிறது. பாா்வையில் கண்டுள்ள இடமும் வருவாய் கணக்குகளில் உருது பள்ளிக் கூடமாகவும், முகம்மதியா் பெண்கள் பாடசாலை எனவும் உள்ளது.

இந்நிலையில், இந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்காக தற்போது நகராட்சி பயன்படுத்தப் போவதாகவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் அறிந்து அந்த இடத்தை சமுதாயத்தின் சாா்பாக உருது பள்ளிக் கூடமாகவே பயன்படுத்திக் கொள்ள புதுப்பித்து தருமாறு நகர இஸ்லாமியா்கள் ஆத்தூா் நகராட்சி ஆணையா் பொன்னம்பலத்திடம் கோரிக்கை வைத்தனா். இதே மனுவை நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டனிடமும் கொடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT