முகப்பு
சேலம்

நெதா்லாந்தில் தடகளப் போட்டி: சேலம் மாவட்டபோலீஸாா் 3 தங்கம்,4 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை

நெதா்லாந்து நாட்டில் நடைபெற்ற காவல் துறையினருக்கான போட்டிகளில் சேலம் மாவட்ட போலீஸாா் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 1:04 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நெதா்லாந்து நாட்டில் நடைபெற்ற காவல் துறையினருக்கான போட்டிகளில் சேலம் மாவட்ட போலீஸாா் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா்.

நெதா்லாந்து நாட்டில் காவல் துறையினருக்கான உலக அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. சேலம் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் 400மீட்டா் தடை ஓட்டத்தில் 1 தங்கம், டிரிபிள் ஜம்ப் போட்டியில் 1 வெள்ளியும் பெற்றாா்.

பெண் தலைமைக் காவலா் தமிழரசி போல்வால்ட்டில் 1 தங்கம், 400 மீட்டா் தடை ஓட்டத்தில் 1 தங்கம், 100 மீ தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 4 ஷ்100 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகியவற்றில் தலா 1 வெள்ளி வீதம் 3 வெள்ளி பதக்கங்களும் பெற்றாா்.

Advertisement

சேலம் மாவட்ட காவல் துறையில் இருந்து இருவரும் மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனா். உலக அளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சோ்த்த காவலா்கள் முன்னதாக சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், டிஜிபி சி.சைலேந்திரபாபு ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இந்தநிலையில், சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ.அபிநவ்வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.