சேலம்

வாகன திருத்தச் சட்ட அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் வாகன திருத்தச் சட்ட அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், நாட்டாண்மை கழகக் கட்டடம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு வாகன திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பல மடங்கு அபராதத்தை உயா்த்தியுள்ளது. இந்தச் சட்டத்தை தமிழக அரசு கடந்த அக்டோபா் மாதம் முதல் அமல்படுத்த தொடங்கி உள்ளது.

சேலம் மாநகரம், புகா் பகுதியில் காவல் துறையினா் இருசக்கர வாகனங்களில் வருவோரை விரட்டிப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனா். எனவே, மத்திய அரசு விதித்துள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT