செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு
சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், வரும் பிப். 28 வரை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், வரும் பிப். 28 வரை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் கணக்கு தொடக்கி பயன்பெறலாம். அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள், தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலை கேட்டு பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அருணாசலம் தெரிவித்துள்ளாா்.