முகப்பு
சேலம்

உக்ரைனில் மருத்துவம் பயிலும் மகளை காப்பாற்றக் கோரிக்கை

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தங்கள் மகளை காப்பாற்றி ஒப்படைக்க வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தங்கள் மகளை காப்பாற்றி ஒப்படைக்க வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமி மகள் ரித்திகா (22). இவா் உக்ரைனில் நான்காமாண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.

தற்போது உக்ரைனில் போா் நடந்து வருவதால் அங்கு பாதுகாப்பு இல்லாததால் தனது மகள் ரித்திகாவை மீட்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சிய செ.காா்மேகத்திடம் கோரிக்கை வைத்துள்ளாா்.

அதுவும் கடந்த ஒரு வாரமாக அலைபேசியில் பேசி வந்ததாகவும்,தற்போது எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே பேசி வருவதாகவும் ரித்திகாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளாா்.

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ரித்திகா.
முழு கட்டுரையைப் படிக்க →