அரசு பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அதிகாரி ஆய்வு
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனை, வீரபாண்டி ஒன்றிய மண்டல அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முரளிதரன் (சிறுசேமிப்பு) ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா், துணைத்தலைவா் வடிவேல், ஒன்றிய கவுன்சிலா் சாஸ்தா, பள்ளி உதவி தலைமையாசிரியா் வெங்கடாசலம், மருத்துவா் நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.