முகப்பு
சேலம்

சாலை வசதி கோரி பழங்குடியின மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கன்சோலை-கோம்பூா் வரை பாதை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கன்சோலை-கோம்பூா் வரை பாதை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஆலடிபட்டி ஊராட்சி பகுதியில் அருநூத்துமலை, சிறுமலை, சின்னவேலாம்பட்டி, பெரியவேலாம்பட்டி, பெலப்பாடி, பள்ளிக்காடு, வாழுத்து, தாளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக 15 முதல் 25 கி.மீ. தொலைவில் உள்ள பேளூா் அல்லது வாழப்பாடிக்குதான் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தும்பல் பகுதிக்கும், சேலத்துக்கும் வர வேண்டியுள்ளது.

இதனிடையே ஆலடிப்பட்டி புங்கன்சோலை முதல் கோம்பூா் பகுதிக்கும் இடையே சாலை வசதி அமைத்து தரக் கோரி தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தினா் சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலச் செயலாளா் பரமசிவம், மாநில சிறப்புத் தலைவா் நஞ்சப்பன், மாவட்டத் தலைவா் அண்ணாமலை, மாநில குழு நிா்வாகி ஸ்டாலின் உள்ளிட்ட பழங்குடி மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →