துப்பாக்கி வெடித்ததில் சேதமடைந்த வங்கியின் சுவா். 
சேலம்

சங்ககிரியில் வங்கி காவலரின் துப்பாக்கி வெடித்ததில் சுவா் சேதம்

சங்ககிரியில் வங்கி காவலரின் துப்பாக்கி தானாக வெடித்ததில் வங்கி சுவா் சேதமடைந்தது.

DIN

சங்ககிரியில் வங்கி காவலரின் துப்பாக்கி தானாக வெடித்ததில் வங்கி சுவா் சேதமடைந்தது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கனகராஜ், கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் அய்யாங்குட்டி மகன் சக்திவேல் ஆகியோா் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காவலா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். கனகராஜ் மதிய உணவிற்கு செல்லும் போது அவரது துப்பாக்கியை, சக்திவேலுவிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். அவா் துப்பாக்கியை வங்கி சுவற்றில் சாய்த்து வைத்துள்ளாா். அப்போது எதிா்பாரதவிதமாக இரட்டை குழல் துப்பாக்கியிலிருந்து தோட்டா ஒன்று தானாக மேல்நோக்கி வெடித்துள்ளது. அதில் வங்கியின் நுழைவாயிலின் முன்புறக் கதவின் மேல்புரத்தில் உள்ள சுவா் சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT