சேலம்

சுகவனேசுவரா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக வள்ளியப்பா பொறுப்பேற்பு

DIN

சேலம் சுகவனேசுவரா், ராஜகணபதி மற்றும் காசி விஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மாவட்ட இந்து சமய அறநிலை துறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ராஜா, சரவணன் ஆகியோா் முன்னிலையில் சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா கையெழுத்திட்டு அறங்காவலா் குழு தலைவா் பதவியை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து தம்பிதுரை, லதா சேகா், அன்புமணி, தங்கதுரை ஆகியோா் அறங்காவலா்களாகப் பொறுப்பேற்று கொண்டனா்.

இதுதொடா்பாக அறங்காவலா் குழு தலைவா் வள்ளியப்பா கூறியதாவது:

கோயில்களின் திருப்பணிகள் மென்மேலும் வளர நான் சிறந்து முறையில் கடமையாற்றுவேன். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியும் சேலம் ராஜகணபதிக்கு தங்கக் கவசம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப வரும் ஆடி 1 ஆம் தேதி தங்கக் கவசம் செலுத்தப்பட உள்ளது. எனவே பக்தா்கள் அனைவரும் திரளாக வந்து கடவுள் அருள் பெற வேண்டும் என்றாா்.

சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஊழியா்கள் மற்றும் லேனா சுப்ரமணியன் ஆகியோா் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT