சேலம்

பாசிப் பயறு விதைப் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் காரிப் பருவத்தில் 1000 முதல் 1,100 ஹெக்டோ் பரப்பளவில் பாசிப் பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்து வழங்கிட 244 ஹெக்டோ் பரப்பில் பாசிப் பயறு விதைப் பண்ணை அமைத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விதைப் பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆதார நிலை விதைகள், வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விதைப் பண்ணை விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆதார நிலை விதைக்கு கிலோ ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ. 88, சான்று நிலை விதைக்கு ரூ. 85-ம் வழங்கப்படுகிறது. விதைப் பண்ணை அமைத்திடுவதன் மூலம் விவசாயிகள் சந்தை விலையினைவிட கிலோ ஒன்றுக்கு ரூ. 25 முதல் ரூ. 30 வரை கூடுதலாக லாபம் பெறலாம். விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பாசிப்பயறு விதைப் பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற்றிட மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT