சேலம்

போதைப் பொருள்களை ஒழிக்கக் கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மாநகா் மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.அருள் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் கதிா்.ராசரத்தினம் வரவேற்றாா். மாவட்டத் தலைவா்கள் முருகேசன், மாணிக்கம், முத்துசாமி, பச்சமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் காா்த்தி, கண்ணையன், பெண்கள் உள்பட பாமகவினா் திரளாக பங்கேற்றனா். தடை செய்யப்பட்ட குட்காவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, பாமக-வினா் போதைப் பொருள்களின் பிடியில் இருந்து மாணவா்களை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT