சேலம்

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து சிவகுமாா் மகன் அஜய்பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT