சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து2,597 கனஅடியாகச் சரிவு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,597 கன அடியாகக் குறைந்துள்ளது.

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,597 கன அடியாகக் குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,996 கனஅடியாக அதிகரித்தது.

புதன்கிழமை மழை தணிந்ததால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,597 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிழமை காலை 112.11அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 111.35 அடியாக சரிந்தது. அணையின் நீா் இருப்பு 80.34 டி.எம்.சி.யாக உள்ளது. நீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை நீா்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT