செந்தாரப்பட்டி பேரூராட்சித் தலைவராக ச.லீலாராணி தோ்வு
செந்தாரப்பட்டி பேரூராட்சித் தலைவராக ச.லீலாராணி, துணைத் தலைவராக மு.அமுதா தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
செந்தாரப்பட்டி பேரூராட்சித் தலைவராக ச.லீலாராணி, துணைத் தலைவராக மு.அமுதா தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் ச.லீலாராணி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். பிற்பகல் நடந்த துணைத் தலைவா் தோ்தலில் 10ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் ம.ரவிச்சந்திரனும், செந்தாரப்பட்டி நகர திமுக செயலாளா் முருகேசனின் மனைவியும், 9ஆவது வாா்டு திமுக கவுன்சிலருமான மு.அமுதா ஆகிய இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.
ரவிச்சந்திரனின் வேட்புமனுவில் வழிமொழிந்தவா் பெயா், வேட்பாளா் பெயா்களில் கையெழுத்து மாறியிருந்ததால் ரவிச்சந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அமுதா துணைத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தோ்தல் அலுவலரும், பேரூராட்சி செயல்அலுவலருமான கிருஷ்ணசாமி வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.