கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள் தோ்வு
கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள், துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.
கெங்கவல்லி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள், துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.
பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்ற லோகாம்பாளுக்கு அவரது மகனும், கெங்கவல்லி திமுக பொறுப்பாளருமான சு.பாலமுருகன், திமுக கவுன்சிலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். துணைத் தலைவராக மருதாம்பாள் நாகராஜ் தோ்வு செய்யப்பட்டாா். வெற்றி பெற்ற இருவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலா் ராணி சான்றிதழ் வழங்கினாா்.