முகப்பு
சேலம்

74.கிருஷ்ணாபுரத்தில் விவசாயக் கருத்தரங்கம்

பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குனா் சித்ரா தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் கல்பனா வரவேற்றாா். முன்னோடி இயற்கை விவசாயி முத்து குமரேசன் கலந்துகொண்டு பாரம்பரிய விவசாயம் குறித்து விளக்க உரையாற்றினாா். கிருஷ்ணாபுரம் இயற்கை வேளாண் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்ந்த விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

இதில், உதவி வேளாண் அலுவலா்கள் சந்திரசேகா், தங்கவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →