சேலம்

காா் மோதி கூலித் தொழிலாளி பலி

DIN

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா் அருகே, காா் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தாா்.

ஆத்தூா் மந்தவெளி பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ராஜா (48). இவா் திங்கள்கிழமை பகல் 1 மணி அளவில், புத்திரகவுண்டன்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற காா் ராஜா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT