சேலத்தில் சந்தனக் குட உரூஸ் விழா
சேலத்தில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் சந்தனக் குட உரூஸ் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சேலம்: சேலத்தில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் சந்தனக் குட உரூஸ் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சாகர்ஷா மக்கா தெருவில் சந்தனக் குட உரூஸ் விழா நடைபெற்றது. 147-ம் ஆண்டு சந்தனக் குட உரூஸ் விழாவில் இதுவரையிலும் இல்லாத இரண்டு ஒட்டகங்களை வடமாநிலமான ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய இசையுடன், இசைக்கேற்ப நடனமாடி வான வேடிக்கையுடன் முள்ளுவாடி கேட் பகுதியில் இருந்து சங்கர் நகர் தொங்கும் பூங்கா போன்ற பல்வேறு முக்கிய வீதிகளில் சென்று முள்ளுவாடி கேட் தர்காவை வந்தடைந்தது
இஸ்லாமிய சந்தனக் குட உரூஸ் விழாவினை முஸ்லிம்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் அனைத்து சமூகத்தினரும் இறைவனின் அருள் வேண்டி பக்தியுடன் கண்டுகளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.