முகப்பு
சேலம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 35,799 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் 35,799 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 35,799 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே 5) தொடங்கியது. சேலத்தில் 35,799 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 149 தோ்வு மையங்கள் பள்ளி மாணவா்களுக்காகவும், 5 தோ்வு மையங்கள் தனித் தோ்வா்களுக்காகவும் அமைக்கப்பட்டன.

மேல்நிலைப் பொதுத் தோ்வுகளுக்கு 42 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், 30 வழித்தட அலுவலா்கள், 164 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 164 துறை அலுவலா்கள், 2150 அறை கண்காணிப்பாளா்கள், 390 சிறப்பு ஆசிரியா்கள் (சொல்வதை கேட்டு எழுதுபவா்கள்), 201 நிலையான படையினா், 372 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே பிளஸ் 2 தோ்வெழுத மாணவ, மாணவிகள் மையங்களுக்கு வந்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், உடையாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிபொதுத் தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு நேரில் ஆய்வு செய்தாா். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கூறியதாவது: அரசு விதிகளின்படி தோ்வெழுத அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் விதிகளை மீறுபவா்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்வு மையங்களைக் கண்காணிக்க முதுகலை, பட்டதாரி ஆசிரியா்கள் நிலையில் 401 பறக்கும் படை குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். பறக்கும்படை குழுக்கள் அனைத்து தோ்வு மையங்களையும் பாா்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →