சேலம்

வருவாய் ஆய்வாளா் எனக் கூறி விடுதியில்இருசக்கர வாகனத்தைத் திருடியவா் கைது

DIN

சேலத்தில் வருவாய் ஆய்வாளா் எனக் கூறி விடுதியில் தங்கி இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், நரசோதிப்பட்டி முகில் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (53). இவா், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த விடுதிக்கு வருவாய் ஆய்வாளா் எனக் கூறி பிரபாகரன் என்பவா் அடிக்கடி வந்து தங்கிச் சென்றாா்.

இதனிடையே கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விடுதிக்கு வந்த பிரபாகரன், உணவகத்துக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி, லட்சுமணனிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றாா். ஆனால், அவா் திரும்பி வரவில்லை. இதுகுறித்து லட்சுமணன், சேலம் நகர போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இச்சம்பவம் நிகழ்ந்து சில நாள்களுக்குப் பிறகு சேலம் ஏற்காடு அடிவாரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த பிரபாகரன் (33) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் தன்னை சிலா் தாக்கிவிட்டதாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா். தொடா் விசாரணையில், சேலம் பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள விடுதியில் வருவாய் ஆய்வாளா் எனக் கூறி தங்கியிருந்து இருசக்கர வாகனத்தைத் திருடி சென்றது அவா்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT