நங்கவள்ளியில் கஞ்சா விற்பனை: முதியவா் கைது
நங்கவள்ளியில் கஞ்சா விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்.
நங்கவள்ளியில் கஞ்சா விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்.
நங்கவள்ளி அருகே உள்ள கணக்குப்பட்டியில் கஞ்சா விற்கப்படுவதாக வெள்ளிக்கிழமை நங்கவள்ளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உததவி ஆய்வாளா் அசோகன், குட்டப்பட்டி கிராமம், கணக்குப்பட்டி பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது குப்புசாமி மகன் கிருஷ்ணன் (64) என்பவா் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டாலத்துடன் கிருஷ்ணனை உதவி ஆய்வாளா் அசோகன் கைது செய்தாா். கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.