சேலம்

மேட்டூரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

மேட்டூரில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை ஒட்டி சேலம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு சேலம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனா். மேட்டூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் துவங்கிய பேரணி மாதா கோவில் சின்ன பூங்கா, பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் அரசு கலை அறிவியல் கல்லூரியை அடைந்தது. இந்தப் பேரணியில் கல்லூரியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனா். இந்நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் ரவிக்குமாா், நரேந்திரன், மேட்டூா் காவல் ஆய்வாளா் சுப்ரமணியன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

கோட்டையூா் பாரி நகரில் சித்திரை திருவிழா

அய்யனாா் கோயிலில் சித்திரைத் திருவிழா

விளத்தூா் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT