சேலம்

ஆத்தூர் அருகே தனியார் உணவகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் டீசல் திருட்டு

DIN

ஆத்தூர் அருகே தனியார் உணவகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் இருந்து டீசல் திருடு போனதாக இணையதளங்களில் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தென்னங்குடி பாளையம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. 

இதனை அடுத்து நேற்று இரவு கனரக ஓட்டுநர் ஒருவர் ஓய்வு எடுப்பதற்காக அந்த உணவகம் முன்பு நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வாகனங்களில் இருந்த 100 லிட்டர் டீசல் திருடு போனதாக கூறி விடியோவை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். 

தற்போது அந்த விடியோ வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கனரக ஓட்டுநர்களுக்கிடையே பெறும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT