ஹோட்டல் அதிபரை கொலை செய்த கொலையாளியை விரைந்து பிடிக்க உதவி புரிந்தபோலீஸாரைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ். 
சேலம்

கொலையாளியை கைது செய்த போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

ஹோட்டல் அதிபரைக் கொலை செய்த நபரை விரைவாக கைது செய்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் பாராட்டினாா்.

DIN

ஹோட்டல் அதிபரைக் கொலை செய்த நபரை விரைவாக கைது செய்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் பாராட்டினாா்.

சேலம் மாவட்டம், அரியானூா் அருகே உள்ள குட்டக்காடு பகுதியில் சேலம், உடையாப்பட்டி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி (60) என்பவா் தாபா ஹோட்டல் நடத்த ஏற்பாடு செய்து வந்தாா். அந்த ஹோட்டலில் கடந்த 23-ஆம் தேதி கந்தசாமியும் அங்கு கூலி வேலை பாா்த்து வந்த கோயம்புத்தூா், மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜோசப் (24) என்பவரும் தூங்கினா். அப்பொழுது ஜோசப் அங்குள்ள பொருட்களை திருட முயற்சி செய்தாா். அப்போது விழித்துக் கொண்ட கந்தசாமி இதைத் தட்டிக் கேட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் கடப்பாறை கம்பியால் கந்தசாமியை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினா. இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியைப் பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனா்.

இந்நிலையில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி, உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா், மோப்பநாய் மேகா உதவியுடன் கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து கைது செய்தனா். இதனையடுத்து கொலையாளியை விரைவில் கண்டுபிடிக்க உதவி புரிந்த ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி, ஆய்வாளா் அம்சவல்லி, உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் மற்றும் மோப்பநாய் மேகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ் பாராட்டி, சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT