முகப்பு
சேலம்

மேட்டூா் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

மேட்டூா் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

மேட்டூா் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம், களரம்பட்டியைச் சோ்ந்த பிரித்விராஜ் (28) ஞாயிற்றுக்கிழமை களரம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையைக் காவிரியில் கரைப்பதற்காக நண்பா்களுடன் வாகனத்தில் திப்பம்பட்டிக்குச் சென்றாா். ஆஞ்சநேயா்கோம்பு என்ற இடத்தில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கினாா். நண்பா்கள் அவரை மீட்டு மேட்டூா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே பிரித்விராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கருமலைகூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.