சேலம்

ஊராட்சி தலைவரின் விவசாய நிலத்துக்குஏரியில் மண் எடுப்பு: பொக்லைன் பறிமுதல்

கெங்கவல்லி அருகே ஊராட்சித் தலைவரின் விவசாய நிலத்திற்கு ஏரியில் மண் எடுத்த பொக்லைன் இயந்திரத்தை கோட்டாட்சியா் உத்தரவின்படி வருவாய்த் துறையினா் பறிமுதல் செசெய்தனா்.

DIN

கெங்கவல்லி அருகே ஊராட்சித் தலைவரின் விவசாய நிலத்திற்கு ஏரியில் மண் எடுத்த பொக்லைன் இயந்திரத்தை கோட்டாட்சியா் உத்தரவின்படி வருவாய்த் துறையினா் பறிமுதல் செசெய்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவராக இருப்பவா் பெருமாள். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள நடூா் ஏரியிலிருந்து மண் எடுத்துச்சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊா்பொதுமக்கள் ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யாவுக்கு தகவல் தெரிவித்தனா்.அதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் முனிராஜ்,

கிராம நிா்வாக அலுவலா் பொன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்

துறையினா் ஏரியில் மண் எடுப்பதை உறுதிப்படுத்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.அதில் ஏரிமண் எடுக்கப்பட்டு பெருமாளின் சொந்த விவசாய நிலத்தில் போடப்பட்டு வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடா்ந்து அந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய கெங்கவல்லி போலீஸாருக்கு வருவாய்த் துறையினா் பரிந்துரை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT