சேலம்

ஆனை மடுவு அணை: புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறக்கக் கோரி சாலை மறியல்

DIN

ஆனை மடுவு அணையிலிருந்து வசிஷ்ட நதியில் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, விவசாயிகள் பேளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆனை மடுவு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனம் வசிஷ்ட நதியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பேளூரில் குறிச்சி பிரிவு சாலையில், வியாழக்கிழமை  காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT